சிறப்பாக செயல்பட்டு வந்த நிதிநிறுவனத்தில் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி :ஆனந்த் சீனிவாசன்

சிவகங்கை : சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் மீது ரூ.525 கோடி மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்திப்பிரிவு தலைவர் ஆனந்த் சீனிவாசன் சென்னையில் |செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,”4 மாதமாக தேவநாதன் அளித்துள்ள காசோலை திரும்பி வந்துள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட பி படிவத்தில் எப்படி அண்ணாமலை கையெழுத்திட்டார்?. 125 ஆண்டுகளாக மயிலாப்பூர் நிதி நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளது. சிறப்பாக செயல்பட்டு வந்த நிதிநிறுவனத்தில் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி செய்துள்ளது. பாஜக வேட்பாளர் தேவநாதனை அண்ணாமலையும் தமிழிசையும் பாதுகாக்கக் கூடாது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post சிறப்பாக செயல்பட்டு வந்த நிதிநிறுவனத்தில் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி :ஆனந்த் சீனிவாசன் appeared first on Dinakaran.

Related Stories: