கள்ளழகர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

மதுரை,ஏப்.10: கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா தொடங்க உள்ள நிலையில் தினந்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ெதன் திருப்பதி என்று அழைக்கப்படும் கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது தினந்ேதாறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. சித்திரை திருவிழாவிற்கு சாமி ஆடிகள், திரி எடுப்பவர்கள், தண்ணீர் பீய்ச்சுவோர் உள்ளிட்டோரும் கோயிலுக்கு வருகை தந்து ராக்காயி அம்மன் கோயிலில் தீர்த்தமாடி தங்களது விரதத்தை தொடங்கி உள்ளனர். அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாஜலத்தின் ஆலோசனையின் பேரில் கோயில் துணை ஆணையர் கலைவாணன் தலைமையில் கோயில் உள் மற்றும் வௌி பிரகாரத்தில் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தற்ேபாது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

The post கள்ளழகர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: