தொடர்ந்து தேயிலை தோட்டத்தில் இருந்து காட்டு மாடு சாலையில் குதித்துள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக சாலையில் பயணித்த காரின் மீது குதித்தது. இதில் காரில் பயணித்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், காரின் முன்பக்க கண்ணாடி, மேற்கூரை பகுதி சேதமடைந்தது. பின்னர், மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் ஓடி சென்றது.
இது குறித்து கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது போன்று சாலை, தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உலா வரும் காட்டு மாடு கூட்டங்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post கோத்தகிரி அருகே காட்டு மாடு சாலையை கடக்க குதித்ததில் கார் சேதம் appeared first on Dinakaran.