முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு, துடிப்புமிக்க இளைஞராக செயலாற்றிய வண்ணை மாறன் என்று அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.வேணுகோபால் காலமான செய்தி அறிந்து மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். ஆர்.கே. நகர் தொகுதி முன்னாள் உறுப்பினரான இவர் சேவை மனப்பான்மை கொண்டவராக செயல்பட்டார். எஸ்.வேணுகோபாலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post முன்னாள் எம்எல்ஏ வேணுகோபால் மறைவு: செல்வப்பெருந்தகை இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: