ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்

கொல்கத்தா: ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்குருக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்குர் நேற்று கூறுகையில்‘‘லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் கடிதம் எனக்கு வந்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் நாடு முழுவதும் தீப்பற்றி எரியும். இந்த விவகாரத்தில் முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்பட்டால் மட்டுவா சமுதாயத்தினரின் புனித தலமான தாக்குர்பாரி முழுவதும் அழிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: