எர்ணாவூர் ஜோதி நகர் அருகே இன்று அதிகாலை ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வருகிறது. சுமார் 15 அடி உயரத்துக்கு குடிநீர் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடித்து வெளியேறுவதால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் குடிநீர் வழங்கல் வாரிய ஊழியர்கள் வந்து உடைந்த குழாயை சரி செய்து வருகின்றனர்.
The post மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் appeared first on Dinakaran.