தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது

சென்னை: தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து போயினர். சேலம், திருப்பத்தூரில் தலா 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. வேலூர், நாமக்கல் தலா 106, தருமபுரி, திருச்சி, திருத்தணியில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. கரூர் பரமத்தி, தஞ்சாவூர், மதுரை விமான நிலையம் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. கோவை 103, மதுரை நகரம் – 101, பாளையங்கோட்டையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

The post தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது appeared first on Dinakaran.

Related Stories: