இயந்திரங்களை நம்பி தேர்தலில் நிற்கிறார். மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ராகுல் காந்தி இளைஞர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை பெண்களுக்கு என அனைத்து தரப்பினருக்கும் வாக்குறுதி அளித்துள்ளார். அதிமுகவோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று விஜயகாந்த் சொன்னார். தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி விட்டார்கள் என குற்றம் சுமத்தினாரே? இவர்களை விஜயகாந்த் ஆன்மா மன்னிக்குமா. அருணாச்சல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு சீன மொழியில் பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி வாயை திறக்கவில்லை. சீனாவை பார்த்து பிரதமருக்கு அவ்வளவு பயமா?. சீனாவின் தூதராக மோடியை நியமிக்கலாம். அதற்கு தகுதியானவர் என்று அவர்களது கட்சியை சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். இதைவிட பதிலடி நான் கொடுக்க வேண்டுமா. இவ்வாறு பேசினார்.
The post லடாக் ஆக்கிரமிப்பு குறித்து வாய் திறக்கல.. மோடியை சீனாவின் தூதராக்கலாம்.! செல்வப்பெருந்தகை புதிய ‘ஐடியா’ appeared first on Dinakaran.