இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய பேராபத்து. அரசியலமைப்புச் சட்டம் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. தமிழக மக்கள் மோடியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெள்ள பாதிப்புக்கு வரவில்லை. ஒத்த பைசா கூட தரவில்லை. மாநில அரசு நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றத்தை நாடவேண்டி உள்ளது. மோடி 7 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். அதேபோல் அமித்ஷா வருவதாக கூறி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
தமிழகத்திற்கு சென்று எந்த பயனும் இல்லை என்று அமித்ஷா பயணத்தை ரத்து செய்துள்ளார். மோடியும் அதே முடிவெடுத்தால் அவருக்கு நல்லது. அலைச்சல் குறையும். பயண நேரங்கள் குறையும். தேவையில்லாமல் வந்து அலைகிறார். எத்தனை முறை வந்து அலைந்தாலும் பயனில்லை. தமிழகத்தின் மீது பாசம் உள்ளது போல் நடிக்கிறார். மோடி அடுத்தமுறை பிரசாரத்திற்கு வரும்போது, சமஸ்கிருதம், ஹிந்திக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள், அதே போல் தமிழ் மொழி வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post மோடி, அமித்ஷா எத்தனை முறை அலைந்தாலும் ஒரு பயனில்லை: முத்தரசன் கலாய் appeared first on Dinakaran.