திருவள்ளுர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த செந்திலுக்கு ஆதரவாக பூவிருந்தவல்லி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி சட்டைக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்தார். காக்களூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்த அவர் இஸ்திரி கடையில் சட்டைக்கு இஸ்திரி போட்டு கை சின்னத்திற்கு வாக்கு கோரினார். தஞ்சை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வயலில் இரங்கி விவசாய தொழிலாளர்களுடன் இணைந்து நாற்று நட்டு வாக்கு சேகரித்தார். கோவிலூர், நடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் பரப்புரையில் ஈடுபட்ட அவர் தன்னுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பெண்களுடன் தலையில் பச்சை துண்டை கட்டிக்கொண்டு வயலில் இறங்கி நாட்டுப்புற பாடல்பாடிக்கொண்டே நாற்றுநட்டும் ட்ராக்டர் ஓட்டி உழவு பணி செய்தும் வாக்கு சேகரித்தார்.
The post தமிழ்நாடு முழுவதும் நூதன முறையில் வாக்குசேகரித்த வேட்பாளர்கள்: மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக காய்கறி விற்ற திமுக எம்.எல்.ஏ appeared first on Dinakaran.