குடும்ப பிரச்னையில் வாலிபர் தற்கொலை

திருப்பூர்,ஏப். 4: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயன் (28). இவர் மனைவியுடன் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த கிருஷ்ணவேணி நகரில் தங்கி பாலிபேக் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விஜயன் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஜயன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post குடும்ப பிரச்னையில் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: