13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வடமாநில வாலிபர் போக்சோவில் கைது

திருப்பூர், ஏப்.4: மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சர்சாத் (21). இவர் திருப்பூர் நல்லூரை அடுத்த ராஜீவ் காந்தி நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் 13 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். சிறுமியின் தாய் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்ெகாண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சர்சாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

The post 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வடமாநில வாலிபர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Related Stories: