அரசு பார்வையற்றோர் பள்ளியில் பார்வையற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி

தஞ்சாவூர் ஏப்.3:மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் இயங்கி வரும் தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் பார்வையற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி தஞ்சாவூர் மேம்பாலத்தில் உள்ள அரசு பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தென்னக பண்பாட்டு மைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் ஆலோசனையின் பெயரில்பார்வையற்ற மாணவர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் , இசை ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியை புதுச்சேரியை சேர்ந்த கலைமாமணி விருது பெற்ற கலைஞர் ஜனார்த்தனன் தலைமை வகித்து நடத்தினார்.நிர்வாக அலுவலர் சீனிவாசன், நிகழ்ச்சி அலுவலர் உமா சங்கர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தென்னகப் பண்பாட்டு மைய அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

The post அரசு பார்வையற்றோர் பள்ளியில் பார்வையற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: