திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருத்தணி: திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமையில், மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிரண் முன்னிலை வகித்தார். மாவட்ட, ஒன்றிய, நகர இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ பேசுகையில், ‘நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பெண்கள் திமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இளைஞரணி நிர்வாகிகள் தேர்தலில் பணியாற்ற வேண்டும். குறிப்பாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும்’ என்று வலியுறுத்தினார். இதில் திருத்தணி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மனோகரன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சுகுமாரன், மோதிலால், பாபு, புவனேஷ் குமார், திலீபன் உள்ளிட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: