ஜிஎஸ்டி என்ற ஒரு வரியை விதித்த ஒன்றிய அரசால் இங்கிருக்கும் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுகுறு வியாபாரிகள், கடைக்காரர்கள் எல்லாருமே ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காஸ் சிலிண்டர் விலை உயர்வு என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஓசூரில் ரோஜா மலர்கள் விற்பனை அதிகம். உலகம் முழுவதிற்கும் ஓசூரில் இருந்து தான் மலர்களை ஏற்றுமதி செய்கிறார்கள். இங்கு மிகப்பெரிய ஒரு விற்பனை சந்தையை உருவாக்குவோம். ஓசூரில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலையை உருவாக்குவோம். கெலவரப்பள்ளி அணையில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து, மக்களுக்கு நிலத்தடி நீர் மாசடைவதை தடுப்போம்.அதிமுகவுடன் இணைந்து, நிச்சயமாக மேகதாது அணை கட்ட விடாமல் தடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
The post ஒன்றிய அரசின் ஜிஎஸ்டியால் அனைத்து மக்களும் பாதிப்பு: பிரேமலதா குற்றச்சாட்டு appeared first on Dinakaran.