கோயிலில் பங்குனி திருவிழா

காரியாபட்டி, மார்ச் 29: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காமராஜர் காலனியில் முருகன் கோயில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. பாரம்பரியமாக வணங்கி வரும் சாமி பெட்டி, சமையல் அண்டா ஆகியவை குண்டாற்று கரையில் சிறப்பு வழிபாடு நடத்தி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த திருவிழாவில் பரம்பரை பரம்பரையாக தொன்று தொட்டு வரும் ஆணி பாதம் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர் ஒருவர் ஆணி பாதம் அணிந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தார். மேலும் பூஜை செய்த அண்டாவில் உணவு சமைத்து பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post கோயிலில் பங்குனி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: