மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு

ஜெய்ப்பூர்: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்ரல் 6ம் தேதி ஜெய்ப்பூரில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா நேற்று கூறியதாவது: மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஏப்.6ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட உள்ளது.

ஜெய்ப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள். வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்து மக்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. தேர்தல் பத்திரங்கள் நாட்டின் மிகப்பெரிய ஊழல். எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.6ல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: