இதே போல பவானி, அண்ணாநகர் பகுதியில் பூதப்பாடியை சேர்ந்த பாலுசாமி என்பவர் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.81 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பவானியில் 3 இடங்களில் நடத்தப்பட்டசோதனையில் கேரளாவை சேர்ந்த நெப்சன் என்பவரது காரில் இருந்து ரூ.67ஆயிரம் கைப்பற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே விருவீடு கள்ளர் மடம் சோதனை சாவடியில் நிலையான தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் முறையான ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி கீலபுதூரை சேர்ந்த ரூபகரன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.72 ஆயிரமும், மதுரை மாவட்ட கல்லுப்பட்டியை சேர்ந்த ஸ்வாமிநாதன் என்பவர் 4 சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.50 ஆயிரம் பணத்தை கைப்பற்றினர். தேனிமாவட்டம் கண்டமனூர் அருகே ராமச்சந்திராபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.13 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சித்தார்த் என்பவர் பயணித்த காரில் இருந்து ரூ.61 ஆயிரமும், சின்னமனூரை சேர்ந்த முத்துராஜ் என்பவர் சென்ற காரிலிருந்து ரூ.54 ஆயிரமும் கைப்பற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் 4 சக்கர வாகனத்தில் சௌந்தர் என்பவர் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.91 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
The post தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை: பவானியில் 3 இடங்களில் ரூ.2.17 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.