பாஜவுடன் கூட்டணியால் 80 ஆயிரம் ஓட்டு போச்சு… கதறி அழுத அதிமுக முன்னாள் எம்பி

திருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் தலைமையில் நடந்தது. அப்போது குமார் பேசுகையில், ‘‘இந்த பாஜவுடன் கூடா நட்போடு சென்ற காரணத்தினால் 80 ஆயிரம் வாக்குகள் இந்த தொகுதியிலே மைனஸ்சாக இருந்தது. 9 சட்டமன்ற தொகுதியில் நம்முடைய தெற்கு தொகுதியில், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் கீழே இருந்து பார்த்தால் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். அதேபோல் லால்குடி. இப்படி படிப்படியாக இன்று நாம் பார்க்கும்போது, கீழே இருந்து வரும்போது 6வது இடம்’’ என்று கூறி கதறி அழுதார்.

The post பாஜவுடன் கூட்டணியால் 80 ஆயிரம் ஓட்டு போச்சு… கதறி அழுத அதிமுக முன்னாள் எம்பி appeared first on Dinakaran.

Related Stories: