இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘நேற்று முன்தினம் 9.30 மணியளவில் ஆர்த்தியை, அவரது நண்பர் ஒருவர் அஸ்வேம் பாலம் அருகே பார்த்துள்ளார். அதன்பின் அவரை காணவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
இதற்கிடையே தனது மகளை காணவில்லை என்று கோபால் ஹமால் வெளியிட்ட பதிவில், ‘கோவாவில் தங்கியிருந்த எனது மகள் ஆர்த்தியை காணவில்லை. அவருடன் ெதாடர்பு கொள்ள முடியவில்லை. கோவாவில் வசிக்கும் மக்கள் எனது மகளைக் கண்டுபிடித்து தர உதவ வேண்டும். எனது இளைய மகள் அர்சூவும், அவரது கணவரும் ஆர்த்தியைத் தேடி கோவாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம் appeared first on Dinakaran.