விருதுநகர் தொகுதியில் வெடித்த பாஜக உட்கட்சிப் பூசல்: ராதிகாவுக்கு எதிராக களமிறங்கிய பாஜக நிர்வாகியால் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகரில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராதிகாவுக்கு எதிராக அக்கட்சியின் நிர்வாகியே போட்டியிடுவதால் பரபரப்பு நிலவி வருகிறது. விருதுநகர் தொகுதியில் போட்டியிட ஏற்கனவே வேதா விருப்ப மனு கொடுத்திருந்தார். பாஜக வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே விருதுநகரில் தான் போட்டியிடுவதாக வேதா பிரச்சாரமும் செய்துவந்தார். அண்மையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைக்கப்பட்டதால் ராதிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ராதிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகியான வேதா சுயேச்சையாக போட்டியிடுகிறார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் வேதா இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். டெல்லி பாஜக மோடி அணி என்ற பெயரில் போட்டியிடுவதாக திருமங்கலத்தை சேர்ந்த மருத்துவரான வேதா விளக்கம் அளித்தார். விருதுநகரில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராதிகாவுக்கு எதிராக அக்கட்சியின் நிர்வாகியே போட்டியிடுவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ராதிகா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் பாஜக நிர்வாகியான வேதாவும் இன்று மனு தாக்கல் செய்தார். மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு உறுப்பினராக உள்ள வேதா, போட்டி வேட்பாளராக களமிறங்குவதால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

The post விருதுநகர் தொகுதியில் வெடித்த பாஜக உட்கட்சிப் பூசல்: ராதிகாவுக்கு எதிராக களமிறங்கிய பாஜக நிர்வாகியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: