என்ன காரணம் என்றால், ஜனநாயகத்தின் அடிப்படையில் இயங்குகின்ற, அரசியல் கட்சிகளை முடக்குவது குறிப்பாக காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும் என்றும், தலைவர்கள் மக்களை சந்திக்க கூடாது, போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்வது, நிதி ஆதாரத்தை முடக்கினால் அந்த அரசியல் இயக்கம் முடங்கி விடும், அப்படி காங்கிரஸ் கட்சியை முடக்கி விட பிரதமர் மோடி பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார். மகாத்மா காந்தியும், நேருவும் அகிம்சை வழியில் போராடி நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்று தந்தார்கள். இதை மோடி புரிந்து கொள்ள வேண்டும். பணம் ஒரு பொருட்டே கிடையாது. மக்களை நம்பி நாங்கள் இருக்கிறோம். மக்களுக்கான கட்சி காங்கிரஸ். இவ்வாறு அவர் கூறினார். மூத்த தலைவர் தங்கபாலு, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் செல்வம், எஸ்.ஏ.வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* முதல்வரிடம் காங். வேட்பாளர்கள் வாழ்த்து
அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் வகையில் அதற்கான படிவங்களை சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதை தொடர்ந்து, செல்வப்பெருந்தகை தலைமையில் விஜய்வசந்த், ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், விஷ்ணு பிரசாத் ஆகிய வேட்பாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
The post 11 வங்கி கணக்குகளை முடக்கியதோடு காங்கிரஸ் கட்சியையே முடக்க பாஜ அரசு முயற்சிக்கிறது: செல்வப்பெருந்தகை பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.