மேலும் ஆணையத்தின் ஆவணங்களையும் அவர்கள் அணுகி உள்ளனர். இதன் மூலம் தேர்தல் முடிவுகளில் சீனா தனக்கு சாதகமாக மாற்றத்தை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதவிர, முன்னாள் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் இயன் டங்கன் ஸ்மித் உட்பட 4 எம்பிக்களின் தகவல்களையும் சீன ஹேக்கர்கள் திருடி உள்ளனர். இந்த எம்பிக்கள் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதிலும், சீன அரசின் உரிமை மீறல்களுக்கு கவனத்திற்கு கொண்டு வரும் சர்வதேச குழுவாகவும் செயல்படுபவர்கள். தற்போது இதுதொடர்பான தகவல்களை சேகரித்துள்ள இங்கிலாந்து அரசு அதை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் முடிவு செய்துள்ளது. இதுதொரட்பாக துணை பிரதமர் ஆலிவர் டவுடன் நாடாளுமன்றத்தில் இன்று பேச இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
The post 4 கோடி வாக்காளர்கள் தகவலை திருடிய சீன ஹேக்கர்கள்: இங்கிலாந்து பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.