கடந்த 22ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாநகர பேருந்துகளை பயன்படுத்தியதால் போக்குவரத்து நெரிசல் கனிசமான அளவில் குறைந்து காணப்பட்டது. ஆகவே, இன்று கிரிக்கெட் போட்டிக்கும் மாநகர பேருந்துகளை இயக்க சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பார்வையாளர்கள் மாநகர பேருந்துகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து பயணிக்கலாம்.
குறிப்பாக அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து அடையாறு, மந்தைவெளி, கோட்டூர்புரம், திருவான்மியூர், ஈஞ்சம்பாக்கம், கோவளம், கண்ணகிநகர், பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் செல்லும் பேருந்துகள், சென்னை பல்கலைக்கழக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பாரிஸ் கார்னர், கடற்கரை ரயில் நிலையம், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், மணலி, எண்ணூர், மீஞ்சூர், வள்ளலார் நகர், மூலக்கடை, செங்குன்றம் மற்றும் காரனோடை செல்லும் பேருந்துகள், அண்ணா சாலை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து ராயப்பேட்டை, மந்தைவெளி, நந்தனம், தி.நகர், சைதாப்பேட்டை வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்கட்டளை, பள்ளிக்கரணை, மேடவாக்கம் , கலைஞர் நகர், கிண்டி, விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம். கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, வள்ளுவர் கோட்டம், வடபழனி, போரூர், குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், பூந்தமல்லி, எழும்பூர், அமைந்தகரை, என்எஸ்கே நகர், கோயம்பேடு, பெரம்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு, அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், அயனாவரம், வில்லிவாக்கம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஐபிஎல் நுழைவுச்சீட்டை காண்பித்து மாநகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்; போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.