திமுக மதச்சார்பற்ற கட்சியாக செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் மூன்றாண்டு சாதனைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளுங்கள். மோடியின் செல்வாக்கு வட மாநிலங்களில் சரிந்து வருகிறது. ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். 300க்கும் மேற்பட்ட தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்திலேயே வடசென்னை வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள். தமிழகம் பாண்டிச்சேரியில் நாளை நமதே 40க்கு 40 வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர வைப்போம். இவ்வாறு அவர் பேசினார். பகுதி செயலாளர்கள் செந்தில்குமார், வ.பெ. சுரேஷ், கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
The post ராயபுரத்தில் வேட்பாளர் கலாநிதி வீராசாமி அறிமுக கூட்டம் 300க்கும் மேற்பட்ட தொகுதியில் இந்தியா கூட்டணி வெற்றிபெறும்: திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பேச்சு appeared first on Dinakaran.