சுயமரியாதை இருக்குமானால் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் நிற்கட்டும்: பொன்குமார் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: அரசியல் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதிலும் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை பெறுவதிலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நிகர் அவரே. உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு தொடர்ந்து ஆளாகி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சுய மரியாதை என்று ஒன்று இருக்குமேயானால் தமிழிசை போன்று தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஏதாவது ஒரு தொகுதியில் நின்று நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, பிஜேபியின் சனாதனக் கொள்கையை பரப்பட்டும்.

அதில் யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஒருவேளை அவருக்கு சுயமரியாதை என்று ஒன்று இல்லை என்றால், ஒன்றிய மோடி அரசும், ஜனாதிபதியும் உடனடியாக தமிழ்நாடு ஆளுநரை திரும்பப் பெற்று அரசியல் சட்டத்தின் மாண்பை காத்திட வேண்டும்.

 

The post சுயமரியாதை இருக்குமானால் ஆர்.என்.ரவி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலில் நிற்கட்டும்: பொன்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: