இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவித்து அனைத்து கட்சியினரும் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார். அவர் 3 தடவை தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டெல்டா பகுதிகள் மற்றும் வேலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போக ஒன்றிய அமைச்சர்கள் 18 பேர் தமிழகம் முழுவதும் வந்து பிரசாரம் செய்ய உள்ளனர். அதாவது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், வி.கே.சிங், கிஷன்ரெட்டி, ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 18 பேர் வர உள்ளனர். மேலும் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் தமிழகத்தில் பிரசாரத்திற்காக வர உள்ளார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை, கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு பிரதமர் முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை வரிந்து கட்டி வருவது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
The post நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் பாஜ தலைவர்கள்: பிரதமர் முதல் ஒன்றிய அமைச்சர்கள் வரை வரிந்து கட்டுகின்றனர் appeared first on Dinakaran.