சிறுமலை கோயிலில் பிரதோஷ வழிபாடு

 

திண்டுக்கல், மார்ச் 24: திண்டுக்கல் சிறுமலை அகஸ்தியர்புரத்தில் உள்ள ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிவலிங்கத்திற்கும், நந்தி தேவருக்கும் நல்லெண்ணெய், அரிசிமாவு, திருமஞ்சன பொடி, வாசனை திரவியம், பால், தயிர், எலுமிச்சம் பழச்சாறு, பழங்கள், சர்க்கரை, பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சிவலிங்கத்திற்கும், நந்தி தேவருக்கும் சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூசாரிகள் குணசேகரன் நாகராஜ், வடிவேல் செய்திருந்தனர்.

The post சிறுமலை கோயிலில் பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: