விசாரணையில், தண்டையார்பேட்டை விநாயகபுரத்தை சேர்ந்த நவீன் (19), ஜோயல் (23), சந்தோஷ் (22) என்பதும், நண்பர்களான இவர்கள் அதிவேகமாக பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. இந்த விபத்தில் சுயநினைவு இன்றி கோமா நிலையில் இருந்த சந்தோஷ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post தடுப்பில் பைக் மோதி ராயபுரம் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த மாணவன் பலி appeared first on Dinakaran.