தடுப்பில் பைக் மோதி ராயபுரம் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த மாணவன் பலி

தண்டையார்பேட்டை: ராயபுரம் என்ஆர்டி மேம்பாலத்தில் இருந்து இப்ராகிம் சாலையை‌ நோக்கி நேற்று முன்தினம் ஒரே பைக்கில் 3 பேர் அதிவேகத்தில் வந்தனர். அப்போது நிலை தடுமாறி பக்கவாட்டு சுவரில் மோதி மேம்பாலத்தில் இருந்து பைக்குடன் 3 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். போலீசார், அவர்களை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

விசாரணையில், தண்டையார்பேட்டை விநாயகபுரத்தை சேர்ந்த நவீன் (19), ஜோயல் (23), சந்தோஷ் (22) என்பதும், நண்பர்களான இவர்கள் அதிவேகமாக பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கியதும் தெரிந்தது. இந்த விபத்தில் சுயநினைவு இன்றி கோமா நிலையில் இருந்த சந்தோஷ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் நந்தனத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post தடுப்பில் பைக் மோதி ராயபுரம் மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்த மாணவன் பலி appeared first on Dinakaran.

Related Stories: