இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போது உத்தரவு திரும்ப பெறுவது போன்ற செயலில் ஈடுபட்டு, தற்போது மீண்டும் அந்த வாய்மொழி உத்தரவின் பேரில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களிடம் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், பெயர், பதிவெண், வயது, பாலினம், சாதி, மின்னஞ்சல், தொலைபேசி எண், ஆதார் எண், பிறந்த தேதி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை மாணவர்களை கட்டாயப்படுத்தி பெற்று வருகின்றனர். கவர்னரின் நடவடிக்கைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உதவி செய்து வருகின்றனர். இதனை வைத்து மாணவர்களை பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிக்கு வாக்களிக்க நிர்பந்தம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
* துணைவேந்தர் மறுப்பு
பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், ‘‘மாணவர்களின் ஸ்காலர்ஷிப் வேண்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கூகுள் லிங்க் மாணவர்களுக்கு அனுப்பப்பட்டது. அதில், மாணவர்கள் தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மாணவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்துள்ளனர். இந்த லிங்க் விவகாரத்தில் தற்போது ஏதோ தவறு நடந்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய விளக்கம் அளிக்கப்படும்’’ என்றார்.
The post மாணவர்களின் வாக்காளர் அடையாள அட்டை சேகரிப்பு ஆளுநர், துணைவேந்தர் மீது தேர்தல் அதிகாரியிடம் புகார் appeared first on Dinakaran.