இப்படியான சூழலில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை 7 மணி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவரது இல்லத்திற்கே சென்று அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். அவர் கைதாகலாம் என தகவல் பரவி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முறையீடு செய்துள்ளார். அமலாக்கத்துறை சோதனைக்கு எதிரான மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி கெஜ்ரிவால் முறையீடு செய்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்ய முயற்சிப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
The post அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர முறையீடு.! அவசர வழக்காக விசாரிக்கக் கோரிக்கை appeared first on Dinakaran.