வேதாரண்யத்தில் அறிவியல் இயக்கத்தின் துளிர் தேர்வு

 

வேதாரண்யம்,மார்ச் 20: தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் தேர்வு 4, 5 வகுப்பு மாணவர்கள் எழுதினார். ஏற்கனவே கடந்த 21.2.2024-ல் வேதாரண்யம் வட்டாரத்தில் 24 மையங்களில் ஜூனியர் 6,7,8 வகுப்பு, சீனியர் 9,10 வகுப்பு, சூப்பர் சீனியர் 11,12 வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தது. இதில் 709 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினார். நேற்று தொடக்க வகுப்பு 4,5 வகுப்பு மாணவர்களுக்கு சப்-ஜூனியர் தேர்வு 21 மையங்களில் நடைபெற்றது. இதில் 410 மாணவர்கள் எழுதினர். இத்தேர்வு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளை சந்திக்க இது அடிப்படையாக அமையும். என தமிழ்நாடு அறிவியியல் இயக்க வட்டார தலைவர் சித்திரவேல் தெரிவித்தார்.

 

The post வேதாரண்யத்தில் அறிவியல் இயக்கத்தின் துளிர் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: