இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் பேசிய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ், தேர்தலை அமைதியாக நடத்த அனைத்து கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்கள் அருகே ஒலிப்பெருக்கி மூலம் பிரசாரம் செய்யவோ, வழிபாட்டு தலங்களுக்குள் சென்று வாக்கு சேகரிக்கவோ கூடாது. சிறுவர்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினார். இதில் அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post கும்மிடிப்பூண்டியில் தேர்தல் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.