குப்புரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

கிருஷ்ணராயபுரம், மார்ச் 20: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட குப்புரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமையில் நடைபெற்றது. 2024- 25 ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை குறித்து அரசு பள்ளியில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மூலம் அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர் சக்திவேல் பட்டதாரி ஆசிரியர் சசிகலா ராணி, நெட்டிதா மேரி, லதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post குப்புரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: