டூவீலர் விபத்தில் மே.வங்க கட்டிட தொழிலாளி பலி

 

துவரங்குறிச்சி, மார்ச் 19: துவரங்குறிச்சி அருகே சாலை விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பலியானார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கோபம் ஹன்ஸ்டாவின் மகன் மகேந்திரன் ஹன்ஸ்டா(31). இவர் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் நத்தம் வேம்பார்பட்டி சென்று இறக்கி விட்டு மீண்டும் சொக்கலிங்கபுரம் திரும்பி கொண்டு இருந்தார்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை அதிகாரம் அருகில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த துவரங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் அங்கு அவருக்கு பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் கார்கோ விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post டூவீலர் விபத்தில் மே.வங்க கட்டிட தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: