தேர்தல் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி

 

அறந்தாங்கி, மார்ச் 19: அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு நேற்று வாக்குப் பதிவு இயந்திரங்களை கையாளும் முறை குறித்த முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள 30 மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை குறித்த முதல் கட்ட பயிற்சி வழங்கப்பட்டது. கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் அறந்தாங்கி வட்டாட்சியர் திருநாவுக்கரசு, ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் மாட்டின் லூதர் கிங், அறந்தாங்கி மண்டல துணை வட்டாட்சியர் பாலமுருகன், தேர்தல் துணை வட்டாட்சியர் இளஞ்சேரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

The post தேர்தல் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: