தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் முடிவில்லாமல் தொடர்வதை ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது. இலங்கை அரசை ஒன்றிய அரசு எச்சரிக்க வேண்டும். அதையும் மீறி அத்துமீறல்கள் தொடர்ந்தால் தூதரக அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்தியா – இலங்கை அரசுகள் இணைந்து அமைத்துள்ள கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தைக் கூட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 58 மீனவர்களை விடுதலை செய்யவும், படகுகளையும் மீட்கவும் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
The post தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது ஒன்றிய அரசு நிரந்தர தீர்வு காண அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.