ஆட்டோ கவிழ்ந்து 4பெண்கள் காயம்

ஆறுமுகநேரி, மார்ச் 17:ஆறுமுகநேரி அடைக்கலாபுரம் சாலையில் நேற்று காலை ஆட்டோ ஒன்று திருச்செந்தூருக்கு சென்றது.தொடர்ந்து ஆம்னி பஸ்சும் சென்றது. சீனந்தோப்பு விலக்கு அருகே ஆட்டோவை ஆம்னிபஸ் முந்தியபோது பஸ்சின் பின்பக்கம் உரசியதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோ டிரைவர் வடக்கு ஆத்தூர் சாந்தகுரூஸ்(53), ஆத்தூர் கீழரதவீதியைச் சேர்ந்த 4 பெண்களும் காயமடைந்தனர். அப்பகுதியினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆட்டோ டிரைவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ஆட்டோ கவிழ்ந்து 4பெண்கள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: