காய்கறி மற்றும் பழம் வியாபாரம் செய்கின்ற சிறு வியாபாரிகள் கூட குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. வணிகர்கள் உரிய விற்பனை பட்டியலுடன் பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களை தடுத்து கைப்பற்றுவதையும், தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தி, காலதாமதம் செய்வதையும் தவிர்த்திட வேண்டி, அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி, பொருட்கள் விநியோகத்திலும், மக்கள் சேவையிலும் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவண்ணம் தேர்தல் நடைமுறைகளை அமல்படுத்திட வேண்டும். வணிகர் தின மாநில மாநாடு மே 5ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுபணிகளில் எவ்வித குறுக்கீடும் செய்திடாமல் ஒத்துழைப்பு அளித்திட அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்து செல்ல அனுமதி வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையரிடம் விக்கிரமராஜா கோரிக்கை appeared first on Dinakaran.