கே.சி.ஆர் மகள் கவிதாவுக்கு மார்ச் 23 வரை ஈடி காவல்


புதுடெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கவிதாவை வரும் 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவருமான கே.சந்திர சேகர ராவின் மகள் கவிதாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று முன்தினம் ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக கவிதா கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கவிதாவை நேற்று டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது கவிதாவை 10 நாள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி கோரினர். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி எம்.கே.நாக்பால், கவிதாவை வரும் 23ம் தேதி வரை 7 நாள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

The post கே.சி.ஆர் மகள் கவிதாவுக்கு மார்ச் 23 வரை ஈடி காவல் appeared first on Dinakaran.

Related Stories: