இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு

ஒட்டாவா: கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் பிக் ஸ்கை வே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த வாரம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த வீட்டில் சோதனை செய்ததில் கருகிய நிலையில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் எத்தனை பேரின் சடலங்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் தீ விபத்தில் இறந்தது இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதியினர் மற்றும் அவர்களது 16வயது மகள் என்பது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

ராஜீவ் வாரிகூ, அவரது மனைவி ஷில்பா கோதா, மகள் மாஹேக் வாரிகூ என்பது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜீவ் ஆன்டாரியோ சுகாதார துறை அமைச்சகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே சந்தேகத்திற்கிடமான முறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேரும் உயிரிழந்துள்ளதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post இந்திய வம்சாவளி தம்பதி, மகள் கனடாவில் மர்ம சாவு appeared first on Dinakaran.

Related Stories: