அமெரிக்காவிலும் எரிசக்தி துறை சார்ந்த நிறுவனங்களை நடத்தி வரும் அதானி குழுமமோ அல்லது அதன் தலைவர் கவுதம் அதானியோ தங்களுக்கு சாதகமான நடவடிக்கைகளுக்காக இந்தியாவில் லஞ்சம் கொடுத்தார்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்க சட்டத்துறையின் கீழ் இயங்கும் மோசடி விசாரணை பிரிவு அமெரிக்காவில் அதானி குழுமத்துடன் தொடர்புடைய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான அசூர் பவர் குளோபல் நிறுவனத்தையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இதனிடையே கவுதம் அதானி மீதான அமெரிக்க விசாரணை குறித்து தங்களுக்கு எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
The post சலுகைகளை பெற லஞ்சம் கொடுத்த புகார் : அதானி குழுமம் மீதான விசாரணையை தொடங்கியது அமெரிக்கா!! appeared first on Dinakaran.