ஒன்றிய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை, மார்ச் 16: குடியுரிமை திருத்த சட்டம் மூலம் மதச்சார்பின்மையை சிதைக்கும், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து சிவகங்கை அரண்மனைவாசல் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட செயலாளர் பாலையா தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் முத்துரராசு, நிர்வாகிகள் பாஸ்கரன், சுடர்மணி, தமிழேந்தி, அர்ஜூன் (எ) ஆதிவளவன், கணேசன் முன்னிலை வகித்தனர். நில உரிமை மீட்பு இயக்க மாநில செயலாளர் சசி, மாநில துணை செயலாளர் சரவணன் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் பிச்சைபெருந்தகை, மலைச்சாமி, சங்குஉதயக்குமார், போஸ், ஆறுமுகம், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: