தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 549வது கிளை திறப்பு விழா

நெல்லை, மார்ச் 16: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சேத்தியாதோப்பு கிளை நேற்று திறக்கப்பட்டது. தலைசிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கிளைகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. வங்கியின் 549வது கிளை கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் நேற்று காலை ஏடிஎம் வசதியுடன் துவங்கப்பட்டது. சேத்தையாதோப்பு டவுண் பஞ்சாயத்து தலைவர் தங்ககுலோத்துங்கன் புதிய கிளையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் வங்கியின் திருச்சி மண்டல மேலாளர், ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் கூறுகையில், பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பின் வங்கியின் விரிவாக்கம் வேகமாகியுள்ளது. வாடிக்கையாளர்களின் தொடர் ஆதரவால் இன்னும் அதிக கிளைகள் விரைவில் திறக்கப்படும் என்றார்.

The post தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 549வது கிளை திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: