இந்நிலையில், கோடம்பாக்கம் – தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம், தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
The post பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 17ம் தேதி சென்னையில் 44 புறநகர் ரயில் சேவை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.