சீர்காழி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள் பறிமுதல்

 

சீர்காழி, மார்ச் 15: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் கப்புகள் புழக்கத்தில் இருந்து வருவதாக புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் பொறுப்பு சங்கர், நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் ஆலோசனையின் பேரில் நகராட்சி ஊழியர்கள், சீர்காழி நகரில் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 37 கிலோ பாலித்தீன் பைகள், கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post சீர்காழி நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: