குடிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்

 

உடுமலை, மார்ச் 15: குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் விருகல்பட்டி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் கான்கிரீட் சாலை, மெட்டல் ரோடு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.48.03 லட்சம் ஒதுக்கி உள்ளது. பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அணிக்கடவு கிரி தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் பணிகளை துவக்கி வைத்தார். வி.வேலூர் ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பில் ரேசன் கடை, அணிக்கடவு ஊராட்சி நஞ்சேகவுண்டன்புதூரில் புதிய ரேஷன் கடை ஆகியவற்றை இல.பத்மநாபன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிகளில் ஒன்றிய கவுன்சிலர் கவிதா கிரி, ஒன்றிய ஆணையர் செந்தில் கணேஷ் பாலா, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத், உதவி பொறியாளர் கந்தசாமி, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ரகுபதி, விருகல் பட்டி ஊராட்சி துணைச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், வி.வேலூர் சுப்பிரமணியம், மணி, வெங்கடேஷ், சம்பத்குமார், ஊராட்சி செயலர் சென்னியப்பன, சிவராஜ், செல்வராஜ், கார்த்திகேயன், சுரேஷ், தங்கவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குடிமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: