டாஸ்மாக்கில் தகராறு: அதிமுக நிர்வாகி கைது

ஆறுமுகநேரி, மார்ச் 15: தெற்கு ஆத்தூர் அருகே உள்ள கீரனூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(40). அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட இணை செயலாளராகவும், ஆத்தூர் 18வது வார்டு செயலாளருமாக இருந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தெற்கு ஆத்தூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கியுள்ளார். ஆனால் மதுபாட்டிலுக்கு பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் பணம் கேட்ட விற்பனையாளர் ஏரல் மார்க்கெட் தெருவை சேர்ந்த சேர்மத்துரை(51) என்பவரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தூர் எஸ்ஐ செல்வக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணக்குமாரை கைது செய்தனர்.

The post டாஸ்மாக்கில் தகராறு: அதிமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Related Stories: