ஆண்டிபட்டி, மார்ச் 14: ஆண்டிபட்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் வார்டு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு துணைத் தலைவர் ஜோதி சேகர், செயல் அலுவலர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு செலவு கணக்கு வாசிக்கப்பட்டு, அடிப்படை வசதி, வளர்ச்சி பணிகள் மற்றும் சுகாதார பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற மற்றும் நடைபெறவுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்குவது குறித்தும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கவுன்சிலர்கள், பேரூராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post ஆண்டிபட்டி பேரூராட்சி கூட்டம் appeared first on Dinakaran.