இதற்குக் காரணம் பயணிகளின் தேவைக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் இயக்கப்படாதது தான். பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் தொடங்கும் நேரத்திலும், பணி முடியும் நேரத்திலும் கூடுதலாக பேருந்துகளை இயக்குவதன் மூலம் தான் இத்தகைய விபத்துகளை தவிர்க்க முடியும். சென்னையில் 3233 பேருந்துகளுக்கு, 2700க்கும் குறைவாகவும், தமிழ்நாடு முழுவதும் 21,000க்கு 18 ஆயிரத்திற்கும் குறைவாகவும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக 30 ஆயிரமாகவும், சென்னையில் 7 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும்.
The post தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படும் பஸ்கள் எண்ணிக்கையை உயர்த்த ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.